ஆரஞ்சு பழம் உபயோகம் பெரும்பாலும் நம்மிடம் குறைவாகவே உள்ளது. பெரிய மனிதர்களை சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாகவோ அல்லது மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்க செல்கையில் ஒரு ஒப்புக்கோ என ஒரு சில வகைகளில் மட்டுமே உபயோகித்து வருகிறோம். ஆனால் இதன் பலனும் இதிலுள்ள விட்டமின் சத்துக்களும் மிக அதிகம். பலர் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இது ஒரு மிக சிறந்த உணவு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அறுசுவையுள் …
Read More »தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். காலைல எந்திச்சி குளிச்சதுல இருந்து இரவு வரைக்கும் நமக்கு நெறைய விசயங்கள்ல தேங்காய் எண்ணெய் உபயோகப்படுது. கடையில போயி பாக்கெட்ல இல்ல பிளாஸ்டிக் டப்பால இருக்குற எண்ணெய்தான் வாங்கி உபயோகப்படுத்துறோம். சரி. இப்படி நாம வாங்கி உபயோகிக்கற எண்ணெய் எல்லாம் தேங்காய் எண்ணையே கிடையாது. எப்படிங்கரீங்களா? சந்தைல தேங்காய் விலை ஏறும் போது தேங்காய் எண்ணெய் விலை …
Read More »நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.
‘வைத்தியனுக்கு கொடுக்கிறத வாணியனுக்கு கொடு’ இப்படி ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் வைத்தியனிடம் போகாமல் நம்மள நாமே பாதுகாத்துக்கலாம் இல்லையா? நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப யோசிக்கவே செய்யணும். நம்ம உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், உடம்புக்கு வெளியே இருந்தாலும் சரி, உள்ள இருந்தாலும் சரி நாம உபயோகிக்கிற பொருள் நூறு சதவீதம் ஆரோக்கியமானதுதானா? சுத்தமானதுதானா? உடலுக்கு …
Read More »நெல்லிக்கனி (நெல்லிக்காய்)
நெல்லிக்கனி (நெல்லிக்காய்) கனிகளுள் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் ‘ராஜ கனிகள்’ என்று பெயர். ஒன்று எலுமிச்சை மற்றொன்று நெல்லிக்கனி. இக்கனியின் ஆயுள் நீட்டிக்கும் தன்மை தெரிந்துதான் அதியமான் அவ்வைக்கு கொடுத்ததாக வரலாறுகளில் கூறப்படுகிறது. இப்படி நீண்ட வரலாறு கொண்ட அமிர்தத்திற்கு ஒப்பான அந்த நெல்லிக்கனியின் சிறப்பைப்பற்றி இங்கே பார்ப்போம். ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று போற்றப்படும் நெல்லிக்கனியானது அரிநெல்லி என்றும் காட்டு நெல்லி அல்லது பெருநெல்லி என்றும் இரு வகைகளில் …
Read More »எலுமிச்சம்பழம்
எலுமிச்சம்பழம் எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சம்பழத்தினை மட்டும் எலிகள் கடிக்காது. (எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்திருக்கும் பழம் என்பதால் இதனை முன்னோர்கள் எலிமிச்சம்பழம் என்றும் சொல்வதாக கூறுவார்கள்). எலுமிச்சம்பழம் எல்லாருக்கும் தெரிந்த பழம்தான். பொதுவாக இதை ஊறுகாய் இடுவதற்கும், சாறு பிழிந்து அருந்துவதற்கும், புதிதாக கார் வாங்கினால் டயருக்கு அடியில் வைப்பதற்கும் (திருஷ்டி கழியுமாம்..) என ஒரு சில வகையிலே மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். இதன் பயன் இவ்வளவுதான் என்றும் நமக்குள்ளே …
Read More »கொத்தமல்லி கீரை
கொத்தமல்லி கீரை அட.. என்ன ஒரு மணம்…! இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே..! ஒரு மிதிவண்டியில அந்த கீரைய கொண்டுட்டு போனா அந்த தெருவே அப்படி ஒரு மணமா இருக்கும்ல..? அப்படிப்பட்ட இந்த கீரைய சமையலுக்கு உபயோகிக்காத வீடே இல்லைன்னு சொல்லலாம். கடையில எந்த ஒரு சமையலுக்கும் காய்கறி வாங்க போகும்போது அத இலவசமா கொஞ்சம் போலயாவது வாங்கிட்டு வந்துரனும் நமக்கு. அப்படி …
Read More »மணத்தக்காளி கீரை
மிளகு தக்காளி, சுக்கட்டிக்கீரை, கருஞ்சுக்கட்டி … இந்த பெயர்களை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா…? இவையெல்லாம் மணத்தக்காளி கீரையின் மற்ற பெயர்களே… இந்த செடியினை அதிகம் பேர் பார்த்திருப்பீர்கள். குட்டித்தக்காளி, குட்டை தக்காளி, குறுந்தக்காளி என்று கிராமங்களில் கூறி அதைப்பார்த்தும் பார்க்காதது போல் போய் இருந்தீப்பீர்கள். மணத்தக்காளி கீரை என்றாலே இன்னும் சிலருக்கு தெரிவது, அது வயிற்றுபுண்களை ஆற்றக்கூடியது என்று. அது போக இன்னும் அதிகமான சத்துக்கள் அதில் உள்ளது. அது என்னவென்று …
Read More »பசலைக்கீரை
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறந்த நிவாரணி பசலைக்கீரையாகும். மஞ்சள் காமாலையால் உடல் மெலிந்தவர்கள் பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். மேலும், மலக்கட்டு சீர் செய்யும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும். பசலைக்கீரையை வதக்கி வீக்கம், கட்டி போன்றவற்றின் மேல் வைத்து கட்டி வர, கட்டி உடைந்து புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு. சீழ் பிடித்து நீண்ட நாள் ஆறாமல் புண்கள் இருந்தாலும் அதையும் இக்கீரையை …
Read More »வல்லாரைக்கீரை
சரஸ்வதி கீரை,யோசனை வல்லி என்று சொல்லப்படும் இக்கீரையில் இரும்புச்சத்து, மனிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் மிகுதியாக உள்ளது. இந்த கீரையினை பறித்து அப்படியே பச்சையாக தினமும் காலையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை விருத்தியாகும். ஞாபக சக்தி அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ‘வல்லாரை வெல்ல வல்லாரை உண்க’ இது பழமொழி. அதாவது, வல்லவர்களை வெல்ல வேண்டுமென்றால் வல்லாரை சாப்பிடவும். வல்லாரையை சாப்பிட்டால், …
Read More »அகத்திக்கீரை
அகம் + தீ + இலை = அகத்திஇலை. அகத்தில் (உடலில் அல்லது மனத்தில்) உள்ள தீயை இல்லாமல் செய்யாமல் செய்யக்கூடியது. எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சிய சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்தும் இதில் மிகுதியாக உள்ளது. பெண்களுக்கு உடல் பலகீனத்தால் எலும்புகலானது பாதிப்படையும். பெண்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து …
Read More »